close
Choose your channels

முகம் பார்க்காத முகநூல் காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்த கல்லூரி மாணவி

Tuesday, December 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முகம் பார்க்காத முகநூல் காதலனுக்காக பெற்ற தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் மூலம் முகம் பார்க்காமல் காதலிக்கும் காதல் ஜோடிகள் அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் அருகே தேவபிரியா என்ற கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக முகநூலில் அறிமுகமாகிய அறிவழகன் என்பவரை காதலித்து வந்தார். படிப்பை விட காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீண்ட நேரம் அவர் முகநூலில் காதலனுடன் சேட்டிங் செய்ததை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் காதல் நோய் முற்றிப்போய், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அறிவழகனை திருமணம் செய்ய தேவபிரியா முடிவு செய்தார். இதனையடுத்து தேவபிரியாவை அழைத்து செல்ல அறிவழகனின் இரண்டு நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால் இதனையறிந்த தேவபிரியாவின் தாயார் மகளை கண்டித்தார். காதல் பித்தம் தலைக்கேறியிருந்த தேவபிரியா தன்னை தடுத்த தாயாரை கடுமையாக தாக்கிவிட்டு அறிவழகனின் நண்பர்களுடன் செல்ல முயன்றார்

ஆனால் தேவபிரியாவின் தாயாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தேவபிரியாவையும் அறிழகனின் நண்பர்களையும் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் படுகாயம் அடைந்த தேவபிரியாவின் தாயார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததால் அவரது மரணத்திற்கு காரணமான தேவபிரியாவை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

முகம் பார்க்காத முகநூல் காதலனுக்காக தாயையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் கல்லூரி மாணவி தேவபிரியா தற்போது தன் தவறை உணர்ந்து கதறி அழுது வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.