close
Choose your channels

ரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி!

Monday, January 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிரை இழக்கும் பலர் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு மாணவிகள் ரயில் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும்போது பரிதாபமாக ஒருவர் பலியாகியும் இன்னொருவர் படுகாயம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒரு ரயில் பாலத்தில் நின்றபடி இரண்டு மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த பாலத்தில் திடீரென ஒரு ரயில் மிக வேகமாக வந்துள்ளது. அந்த ரயில் ஒரு மாணவி மீது மோதியதால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னொருவர் பாலத்திலிருந்து ஆற்றில் கீழே விழுந்தார். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாலத்தில் அபாயகரமான இடத்தில் நின்றுகொண்டு செல்பி எடுப்பதால் விலைமதிப்பில்லா ஒரு மாணவியின் உயிர் போனது மட்டுமன்றி இன்னொரு மாணவியின் உயிர் ஊசலாடிக் கொண்டு இருப்பதால் சுற்றுலா வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.