close
Choose your channels

குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி!

Sunday, February 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பிறந்த அன்றே திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே ஜெகநாதன் என்பவரின் மகள் கோகிலா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து திடீரென கோகிலா கர்ப்பமானார். இருப்பினும் அவர் தனது கர்ப்பத்தை யாரிடமும் கூறாமல் மறைத்து கல்லூரிக்கு வழக்கம்போல் சென்று வந்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவி கோகிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமாகாமலேயே குழந்தை பெற்றதை அறிந்த கோகிலாவின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைக்கு காரணமான பரமசிவன் மீது போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது பரமசிவன் கோகிலாவை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனை அடுத்து குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கோகிலாவுக்கும் பரமசிவனுக்கும் காவல் நிலையத்திலேயே திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு போலீசார் உள்பட இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.