close
Choose your channels

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தந்தையும் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Friday, October 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பரங்கிமலையில் நேற்று கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் திடீரென ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மறைந்த கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த கல்லூரி மாணவர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் அவரது காதலை சத்யா ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென சதீஷ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது சத்யாவை தள்ளி விட்டதாகவும் இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து சதீஷ் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படைகள் சென்னை துரைப்பாக்கத்தில் சதீஷ் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மகள் சத்யா கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் அவரது தந்தை மாணிக்கம் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகிய இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.