கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தந்தையும் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

  • IndiaGlitz, [Friday,October 14 2022]

பரங்கிமலையில் நேற்று கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் திடீரென ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மறைந்த கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த கல்லூரி மாணவர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் அவரது காதலை சத்யா ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென சதீஷ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது சத்யாவை தள்ளி விட்டதாகவும் இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து சதீஷ் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படைகள் சென்னை துரைப்பாக்கத்தில் சதீஷ் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மகள் சத்யா கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் அவரது தந்தை மாணிக்கம் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகிய இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொங்கல் விருந்தாக  'துணிவு' - 'வாரிசு' ரிலீஸ்: பிரபலம் அளித்த உறுதியான தகவல்!

 ஒரே நாளில் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆவது உண்மைதான் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள்: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல சீரியல் நடிகை தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த இளைஞர்: ஒருதலை காதலா?

கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரகுல் ப்ரித்திசிங்கின் வருங்கால கணவர் இவர்தான்: சகோதரர் வெளியிட்ட தகவல்!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் வருங்கால கணவர் இவர்தான் என ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' 3வது சிங்கிள் பாடல்.. எழுதி, பாடியது இந்த பிரபலமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் சென்சார்