close
Choose your channels

ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த சென்னை கல்லூரி மாணவி: 

Saturday, May 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த சென்னை கல்லூரி மாணவி: 

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரும் அவருடைய நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததால் ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்த அந்த மாணவி குதித்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் இருந்து அய்யப்பந்தாங்கல் செல்லும் ஷேர் ஆட்டோ ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த ஆட்டோவில் இருந்த டிரைவரின் நண்பரும், டிரைவரும் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்துள்ளார்.

பின்னர் அவர் கிண்டி காவல்நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பரான கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன், கோவூரை சேர்ந்த பவீன் ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.