close
Choose your channels

நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

Wednesday, November 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 19 வயது சினேகா என்ற இளம்பெண், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் சினேகா சமீபத்தில் ஊருக்குச் சென்று தனது பெற்றோரை பார்த்து விட்டு இன்று விடிகாலை ஹாஸ்டலுக்கு திரும்பியுள்ளார்.

ஹாஸ்டலுக்கு திரும்பிய அடுத்த நிமிடமே அவர் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு நடுரோட்டில் வந்து தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதிகளில் அதிக நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நடுரோட்டில் ஒரு பெண் தீக்குளிப்பதை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து பதறி அடித்துக் கொண்டு அவருடைய பெற்றோர்களும் விரைந்து கோவைக்கு வந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சினேகாவிற்கு 90% தீக்காயம் இருந்ததால் அவர் சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும் இந்த காதல் பெற்றோர்கள் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos