close
Choose your channels

11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி!

Monday, December 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி மாணவர் ஒருவரால் கர்ப்பமான 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் வசந்த் என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி 11ம் வகுப்பு மாணவி திடீரென கர்ப்பமானதாகவும் இதுகுறித்து அவர் தனது காதலர் வசந்திடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கருக்கலைப்பு மாத்திரை ஒன்றை மாணவி வசந்த் கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது பேத்தியின் காதல் குறித்தும் கர்ப்பமானது குறித்தும் அவரது தாத்தாவிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் வசந்த் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர் வசந்தை கைது செய்த போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமானதும் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.