close
Choose your channels

லைக்குகளுக்காக பதிவிட்ட புகைப்படம்...! தற்கொலையில் முடிந்த பரிதாபம்...!

Thursday, June 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மலையடி வெண்பாக்கம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் குணசேகரன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஸ்வேதா தனியார் கலைக்கல்லூரியில் பட்டம் பயின்று வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாணவி, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதேபோல் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்வேதா.

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் மாணவியின் புகைப்படத்தை நவீன தொழில்நுட்பம் மூலமாக, ஆபாசமாக சித்தரித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்வேதா சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக, கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் குறித்து வீட்டுக்கு தெரிந்துவிடுமோ என்று அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா, வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள், தங்கள் மகளை காணாததால் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.அப்போது தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில், ஸ்வேதா சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் தற்கொலைக்கு சமூக வலைதளத்தில், வெளியான ஆபாச புகைப்படம் தான் என்ற தகவல் தெரியவந்தது.

இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மர்ம நபர்கள் குறித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல பல வக்கிர தாக்குதல்கள் பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படி வக்கிர செயலை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos