close
Choose your channels

பள்ளி மாணவியை காதலித்த கல்லூரி மாணவர்: காதலிக்காக செய்த கொலையால் பரபரப்பு

Saturday, June 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி மாணவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரை காதலித்த நிலையில் அந்த காதலிக்காக கொலை கொலை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் அவ்வப்போது தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர் தனது காதலியான பள்ளி மாணவியை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று அங்கு பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிறுவன் ஒருவன் இந்த காதல் ஜோடியை பார்த்து விட்டதாகவும், கல்லூரி மாணவரின் காதலியான அந்த பள்ளி மாணவியின் பக்கத்தை வீட்டில்தான் அந்த சிறுவன் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி, தன்னுடைய காதலரிடம் அந்த சிறுவன் தன்னை தனது பெற்றோரிடம் காட்டி கொடுத்து விடுவான் என்று பயந்தபடியே கூறியுள்ளார். இதனை அடுத்து கல்லூரி மாணவர் அந்த சிறுவனை அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் குத்தி கொலை செய்து பிணத்தை புதரில் வீசி எறிந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவன் காணாமல் அவனது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடிய போது சிறுவன் கழுத்தறுபட்டு புதரில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்தபோது சிறுவனை கொலை செய்ததும் கல்லூரி மாணவர் என்றும் பள்ளி மாணவியை காதலித்ததால் இந்த கொலை நடந்தது என்றும் கண்டுபிடித்து, கல்லூரி மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.