உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த கல்லூரி மாணவர்: அதிர்ச்சியில் காதலி!

  • IndiaGlitz, [Tuesday,November 29 2022]

உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என காதலன் காதலிகள் வசனங்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலிக்காக தனது உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற கல்லூரி மாணவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் சண்டையும் வந்ததாக தெரிகிறது. அப்போதெல்லாம் ஒருவரையொருவர் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று இன்னொருவரை பயமுறுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி சுமதிக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு என்ன பரிசு வேண்டும் என மோகன் போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இந்த விஷயத்திலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது.

அப்போது மோகன் வழக்கம்போல், ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதை அடுத்து சுமதி வழக்கமாக காதலன் கூறுவது தானே என்று அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டார். ஆனால் காதலியிடம் சொன்னபடி திடீரென தூக்கில் தொங்கி மோகன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது கடைசியாக அவர் சுமதிக்கு தான் போன் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து சுமதியிடம் போலிசார் விசாரித்த போது அவர் பிறந்த நாளின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரச்சாரம் செய்யும் மோசமான திரைப்படம்… தி காஷ்மீர் ஃபைல்ஸ்-ஐ விளாசிய முக்கிய இயக்குநர்!

கோவாவில் நடைபெற்றுவந்த சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்‘ திரைப்படம் திரையிடப்பட்டது

நம்மளோட உரிமைகளை நாம தான் கேட்டு வாங்கணும், தேவைப்பட்டா புடுங்கி எடுக்கணும்.. 'ரத்த சாட்சி' டீசர்

 பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான 'ரத்த சாட்சி' என்ற திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீஸர் தற்போது வைரலாகி வருகிறது. 

படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நாய்க்குட்டியுடன் விளையாடும் கீர்த்தி சுரேஷ்: க்யூட் வீடியோ

நாகர்கோவிலுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடன் அழைத்து செல்ல நாய் குட்டி உடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா.. எந்த நாடு தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

என் அம்மாவை எப்படி நீ இப்படி பேசலாம்.. கதறியழுத ஷிவின்.. யார் காரணம்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின், 'என் அம்மாவை நீ எப்படி இப்படி பேசலாம் என சக போட்டியாளரிடம் வாதிட்டு கதறி அழுத காட்சியின் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது