சினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ....! ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...!

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார், கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ளது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, குமரி எம்.பி விஜய்வசந்த் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மருத்துவமனைக்கு அளித்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், தினசரி 100-க்கும் அதிகமான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவிட் தொற்று இருப்பதை கண்டறிய மக்களை இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்தபின், கோவிட் சென்டர்கள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா பணிகளுக்காக மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் கூடுதலாக தேவைப்படுவது குறித்து அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து குமரி பாராளுமன்ற உறுப்பினரான, விஜய்வசந்த் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இந்த வாகனம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வரவும், குணமடைந்தவர்களை அழைத்து செல்ல விடவும் பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

More News

கணம் கோட்டாரே உங்களுக்குமா? கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்!

கொரோனா பரவல் ஆரம்பத்ததில் இருந்தே விதவிதமான விழிப்புணர்வு விளம்பரங்கள் காலர் டியூனாக செல்போன்களில் ஒலித்து வருகிறது.

மனுஷனா மாறுங்கடா... நடிகையின் சாட்டையடி பதிலுக்கு குவியும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள்!

'பொதுநலன் கருதி' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நெட்டிசன் ஒருவரின் மதமாற்ற கேள்விக்கு அளித்த சாட்டையடி பதில் இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது

தனியா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா? நெட்டிசன்களை அலறவிடும் பிக்பாஸ் நடிகை புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

கொரோனா நிவாரண நிதியாக கவியரசு வைரமுத்து கொடுத்த தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க

சித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா? கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய்நாத் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.