close
Choose your channels

எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிசாமி செய்தார்: காமெடி நடிகர்

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய உடன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தில் நீட் தேர்வு குறித்த காரசாரமான விவாதம் நடந்தது.

குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையே நீட் தேர்வு குறித்து நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மூன்றாம் நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில் திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் காமெடி நடிகருமான கருணாஸ் பேசியபோது ’கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கது. மேலும் ’அரியர் மாணவர்களின் அரசன்’ என்றும் முதல்வர் பழனிசாமி புகழப்படுகிறார்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களை அனைவரையும் தேர்ச்சி பெற வைத்து இதுவரை எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார் என்று கருணாஸ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.