கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல காமெடி நடிகரின் 4 வயது மகள்

  • IndiaGlitz, [Sunday,May 20 2018]

கோலிவுட்டில் திரைநட்சத்திரங்கள் அறிமுகமாவது புதியது இல்லை. சிவாஜி கணேசனின் வாரிசுகள் முதல் நடிகை மீனாவின் மகள் வரை கோலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் தான். அந்த வகையில் காமெடி நடிகர் கொட்டாச்சியின் நான்கு வயது மகள் மானஷ்வி ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்ரீமணி என்பவர் இயக்கவுள்ள த்ரில் படமான 'கண்மணி பாப்பா' என்ற படத்தில் மானஷ்வி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். 'தொட்டால் தொடரும்' படத்தின் நாயகன் தமன்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மியாஸ்ரீ நாயகியாக நடிக்கவுள்ளார்.

பில்டிங் காண்ட்ராக்டராக நடிக்கும் தமனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. கஷ்டப்பட்டு பணம் சேர்த்து ஒரு சொந்த வீட்டையும் வாங்கி தனது குடும்பத்துடன் அதில் குடியேறியபோது அந்த வீட்டில் ஒரு பேய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் நடக்கும் திகில் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்று இயக்குனர் ஸ்ரீமணி கூறியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க மானஷ்வியை சுற்றியே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மானஷ்வி நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், அதில் ஒன்று திர்ஷா நடிக்கும் 'பரமபதம்' என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எம்ஜிஆர்-சிவாஜி முதல் அஜித்-விஜய் வரை நடித்த கேரக்டரில் முதல்முறையாக பிரபுதேவா

சினிமா ஹீரோக்களுக்கு காக்கி சட்டை அணிய வேண்டும் என்பது ஒரு கனவு என்றே சொல்லலாம்

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசியவிருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'செம போத ஆகாதே': மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

அதர்வா நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'செம போத ஆகாதே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்றது.

திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்

புதுச்சேரியில் இருந்து திருமண பார்ட்டி ஒன்றுக்காக மதுபாட்டில் கடத்தி வந்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை

மகனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய அரவிந்தசாமி

கடந்த 90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்தசாமி,