close
Choose your channels

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி: தீவிர சிகிச்சை பிரிவில் மனைவி!

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் கொரோனாவால் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் சற்று முன் நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஒரு

கொரோனா தொற்று காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நடிகர் பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் தகவல் வந்துள்ளது

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.