ரஜினி அரசியலுக்கு வர இந்த ஒரு தகுதி போதும்: நடிகர் செந்தில்

  • IndiaGlitz, [Saturday,June 17 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசிய பரபரப்பான பேச்சு தமிழக அரசியலில் பெரும் சுனாமியை ஏற்படுத்தியது. அவர் கன்னடர், அதனால் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்களும், பொதுமக்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுவதாக பத்திரிகைகளின் சர்வே கூறுகின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல நகைச்சுவை நடிகரும் அதிமுக ஆதரவாளருமான செந்தில் கூறுகையில், "தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதற்கு அவர் இந்தியர் என்ற ஒரு தகுதி போதும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுக குறித்து செந்தில் கூறியபோது, 'அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை நடத்துவதுதான் இப்போதைய தேவை. பதவிகளை சிலரே வைத்துக்கொள்ளாமல் பிற எம்ஏல்ஏகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்

ரஜினியுடன் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள செந்தில் அதிமுக ஆதரவாளராக இருந்தும் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது அவருடைய அரசியல் நாகரீகத்தை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

வருடக்கணக்கில் யோசிக்கும் ரஜினியை வலிய போய் சந்தித்த கஸ்தூரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கலாய்த்தவர்கள், திட்டியவர்கள், விமர்சனம் செய்தவர்கள் கூட அவரை நேரில் பார்த்தால் அவரது அன்புக்கு சரண் அடைந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

ஐநாவின் ECOSOC தேர்தல்: அசத்திய இந்தியா ஆறுதல் பரிசு கூட கிடைக்காத பாகிஸ்தான்

ஐநாவின் பொருளாதார, சமூக அமைப்புன் உறுப்பினர்களுக்கான (ECOSOC ) தேர்தல் இன்று நடைபெற்றது.

அஞ்சலியின் அசரவைத்த ஆறு கேரக்டர்கள்

கோலிவுட் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல் நடிப்பையும் வெளிக்காட்டி வெற்றி பெற்ற ஒருசில நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் நடித்த மிகச்சிறந்த ஆறு கேரக்

விவாகரத்து வழக்கு: விஜய் பட வில்லனை எச்சரித்த நீதிபதி

விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தனது மனைவி ப்ரியா மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்

சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முதலாக சிம்ரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.