என்ன நடந்தது குடும்பத்தில்? மனம் திறக்கும் பாலாஜி

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

நகைச்சுவை நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா நேற்று சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தன்னை ஜாதி பெயர் கூறி கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த புகார் குறித்தும், தனது தரப்பு நியாயம் குறித்து நடிகர் பாலாஜி ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நானும் நித்யாவும் ஜாதி என்ன தெரிந்து தான் எட்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இத்தனை வருடம் கழித்து ஜாதி பெயரை சொல்லி திட்டவேண்டிய அவசியம் எனக்கு என்ன உள்ளது? தவறானவர்களின் ஆலோசனையை கேட்டு நித்யா பொய்ப்புகார் கொடுத்துள்ளார்.
எல்லா குடும்பத்திலும் நடக்கும் சின்ன சின்ன சண்டைதான் எங்கள் குடும்பத்திலும் நடந்தது. அதை பேசி தீர்க்காமல் என்ன அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவர் செயல்படுகிறார்.
போலீஸ் புகார் கொடுத்ததும் பத்து பேர் தங்களை வக்கீல் என்று கூறிக்கொண்டு என்னையும் எனது மகளையும் எனது வீட்டிலேயே பூட்டி வைத்துவிட்டனர். இதெல்லாம் போலீசார் முன்னிலையிலேயே நடந்தது. அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் மகளை அம்மாவிடம் அனுப்பி வைக்கும்படி கூறினார். அதற்கு நானும் ஒப்புக்கொண்டேன்.
நமக்குள் இருப்பது சின்ன பிர்ச்சனைதான், பேசி தீர்த்து, மகளின் எதிர்காலத்திற்காக ஒன்றாக வாழ்வோம் என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் உன்னை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன் என்று வீம்பு பேசுகிறார். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக எங்கள் இருவரையும் அந்த கடவுள் சேர்த்து வைப்பார்' என்று வருத்தத்துடன் கூறினார் பாலாஜி
தமிழக மக்களை தனது நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைத்த ஒரு உன்னத கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை விரைவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்து அவர்கள் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

ரஜினிக்காக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து அமைப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் குறித்து அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது...

ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியை விமர்சித்தாரா சத்யராஜ்? சிபிராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கடந்த வாரம் பேசியதில் இருந்து பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம் என்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. மாறாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்ற&

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான கலைஞரின் புகைப்படம். திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முதலாக எம்.எல்.ஏஆக தேர்வு பெற்றார்...

பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய 73 வயது நடிகர்

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பெண்களின் வாழ்க்கை முறை முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூகத்தில் உயர்ந்த பதவிகள் பெற்று சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.