சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிரபல நகைச்சுவை நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் நட்சத்திரங்களும் விரும்புவதுண்டு. வளர்ந்து வரும் இளையதலைமுறை நட்சத்திரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் இருந்து வருவதே இதற்கு காரணம்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார். வையாபுரியுடன் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர்களும் உடன் இருந்தனர்.

ரஜினியுடனான இந்த சந்திப்பு வையாபுரிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் நிச்சயம் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது...

அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி: எடப்பாடியார் ஆட்சி நீடிக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி-ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சசிகலா அணி தினகரன் அணியாக மாறியது. தற்போது தினகரன் சிறைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அணியாக உள்ளது...

சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்...

'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

யாராவது இந்த கேள்வியை கேட்டால் கன்னத்தில் பளாரென அறையுங்கள். பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதாவின் மர்ம மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசிகலா-தினகரன் ஜெயில், அதிமுகவில் பிளவு என தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவை குறித்து பெரிதாக எந்தவித விமர்சனமும் செய்யாதது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது...