close
Choose your channels

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் காலமானார்!

Friday, February 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளருமான தா பாண்டியன் அவர்கள் சற்று முன்னர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 88

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று முதல் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதனை அடுத்து அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்

மூத்த அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தா பாண்டியன் அவர்களின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறந்த அரசியல்வாதி, நேர்மையானவர், எளிமையானவர், சிறந்த எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளருமான தா பாண்டியன் அவர்கள் மறைவை அடுத்து அவரது குடும்பத்திற்கு தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.