close
Choose your channels

விமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! பரிதாப சம்பவம்!

Wednesday, January 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென் அமெரிக்க நாடானா பிரேசிலில் நடைபெற்ற ஒரு சிறிய ரக விமான விபத்தில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசிலின் பால்மஸ் நகர கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது. இதனால் மற்றவர்களோடு பயணம் செய்ய முடியாத நிலையில் இந்த 5 வீரர்களும் ஒரு சிறிய ரக விமானத்தில் பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு பயணம் செய்து உள்ளனர். ஆனால் அந்த விமானம் ஓடு தளத்தை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் விமானத்தில் இருந்த பால்ம்ஸ் கிளப்பை சேர்ந்த 5 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்தக் கோர விபத்தில் பால்ம்ஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா, அந்தக் கிளப்பின் வீரர்கள் லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு ஃபிஃபா அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீரர்கள் பயணம் செய்த விமானம் வெடித்து சிதறி உயிரிழந்த பரிதாபம் கால்பந்து ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.