விமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! பரிதாப சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

தென் அமெரிக்க நாடானா பிரேசிலில் நடைபெற்ற ஒரு சிறிய ரக விமான விபத்தில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசிலின் பால்மஸ் நகர கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது. இதனால் மற்றவர்களோடு பயணம் செய்ய முடியாத நிலையில் இந்த 5 வீரர்களும் ஒரு சிறிய ரக விமானத்தில் பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு பயணம் செய்து உள்ளனர். ஆனால் அந்த விமானம் ஓடு தளத்தை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் விமானத்தில் இருந்த பால்ம்ஸ் கிளப்பை சேர்ந்த 5 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்தக் கோர விபத்தில் பால்ம்ஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா, அந்தக் கிளப்பின் வீரர்கள் லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு ஃபிஃபா அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீரர்கள் பயணம் செய்த விமானம் வெடித்து சிதறி உயிரிழந்த பரிதாபம் கால்பந்து ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

More News

தீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? வடமாநிலக் கும்பலா?

சீர்காழியில் 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்!

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சொல்பவர்கள் கோமாளிகள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் என்றும் தமிழ் ஹீரோ ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளளார்.

'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்! ஆனால்....

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து தற்போதும்

'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா?

விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்த 'மஞ்சப்பை' என்ற படத்தை இயக்கிய ராகவன் அதன்பின் 'கடம்பன்' என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கவுள்ள