மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

நேற்று புது டெல்லியில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக சாடினார். 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டில் உள்ள அனைத்தையும் தனியாருக்கு விற்று வருகின்றனர் என்று ராகுல் கூறினார்.

'இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்திய ரயில்வே, ஏன் செங்கோட்டையையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் அவர்கள் ஒரு நாள் தாஜ் மஹாலையும் விற்றுவிடுவார்கள்' என்று தெரிவித்தார் ராகுல். கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம் தொடங்கி, பாஜக-வை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் கடுமையாக சாடி வருகின்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று பேசிய ராகுல் காந்தி, 'வரலாற்றில் மிக நீளமான பட்ஜெட் தாக்கல் என்றபோது, அதில் முக்கிய பிரச்சனையான வேலையில்லா திண்டாட்டத்திற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது கேள்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் இந்தியாவில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் சார்பில் உங்களை கேள்வி கேட்கின்றேன்' என்று நிர்மலா சீதாராமனை சீண்டியிருந்தார் ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

“வால்க தமில்” – தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்தினை கிண்டலித்த எஸ்.வி.சேகர்

முன்னதாக, தமிழகப் பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

எது சிறந்த கல்வி முறை? பள்ளிகளில் தேர்வுகள் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? உலக நாடுகளின் கல்வி முறை என்ன சொல்கிறது???

உலக அளவில் கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.

பிரதமர் மோடிக்காக அமெரிக்காவில் தயாராகும் அதிநவீன சொகுசு விமானம்..! வெறும் 8,458 கோடி ரூபாய் தான்.

பிரதமர் மோடிக்கு இந்த விமானம் 'மிதக்கும் அரண்மனை' போன்ற உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென தனி விமானம் என்ற பெருமிதத்துடன் பிரதமர் மோடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

“சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என மத்திய அரசின் திட்டத்திற்கு பெயர் வைக்கலாம் – சசி தரூர்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது

'நாடோடிகள்' பட நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணன் இன்று காலை காலமானார்.