அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் முதலில் ஒரு தெளிவை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இதுதான் காரணம் என்ற தெளிவான விளக்கத்தை அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எதற்காக அவர் தாமதிக்கின்றார் என்றே தெரியவில்லை.

ஒருசில தீய சக்திகள் அதிமுகவை உடைக்க சதி செய்கிறது. இதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதே எங்களை போன்றவர்களின் கவலை. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். ஒரு நிரந்தரமான முதலமைச்சர் வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

எனவே வித்யாசாகர் நல்ல முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? புதிய தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அணிக்கு 130 எம்.எல்.ஏக்களும், முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 4 எம்.எல்.ஏக்களும் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

சென்னை விடுதிகள் திடீர் சோதனை. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் இந்த நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம். பார்த்திபனின் அரசியல் கவிதை

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி கமல்ஹாசன், விசு, கங்கை அமரன் போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.