தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது: கொலை வழக்கும் பதிவு

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை நேற்று நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் அவரது சொந்த ஊரில் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காவலர் முத்துராஜ் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரது சொந்த ஊருக்கு விரைந்து, முதலில் அவரது பைக் அந்த பகுதியில் கேட்பாரற்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் அரசன்குளத்தில் இருந்த முத்துராஜை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகர் நடிகைகள் போகவே மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவது கடந்த சில வருடங்களாகவே ஒரு வழக்கமாக உள்ளது

கொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கியிருப்பதால் பெரிய நடிகர்களுக்கு எந்தவிதமான

சிறுமி கொலையாளிக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை எஸ்பி ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ராஜா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசி சென்ற

300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்

உபி மாநில மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் 300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இதுவரை மின்கட்டணமே கட்டாதவருக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம்: கரூர் கூலித்தொழிலாளி அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்க மின் வாரிய ஊழியர்கள் வரவில்லை. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு