close
Choose your channels

குஷ்பு வீட்டருகே நின்ற மர்ம டிரக்: அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்

Monday, June 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது வீட்டின் அருகே மர்ம டிரக் ஒன்று கடந்த 10 நாட்களாக நிற்பதாகவும், அந்த டிரைக்கில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு உடனடியாக சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்து அவரை அசத்தியுள்ளனர்.

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் குஷ்புவின் வீடு அமைந்துள்ள தெருவில் கடந்த பத்து நாட்களாக கண்டெய்னருடன் கூடிய டிரக் ஒன்று நம்பர் பிளேட் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள யாரும் அந்த டிரைக்கை கண்டுகொள்ளவில்லை. பதிவெண் கூட இல்லாமல் நின்று கொண்டிருந்த அந்த டிரக் மீது சந்தேகம் கொண்ட குஷ்பு உடனடியாக சென்னை போலீஸாருக்கு டேக் செய்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த டுவீட் பதிவு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக களமிறங்கிய சென்னை போலீஸ் உடனடியாக அந்த டிரக்கை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பின்னர் குஷ்புவை பாராட்டிய போலீசார், இனிமேல் இதுபோல் தவறு நடப்பதை அறிந்தால் காவல்துறையின் GCTP என்ற செயலியில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தினர். காவல்துறையின் அதிரடி நடவடிக்கைக்கும், ஆலோசனைக்கும் குஷ்பு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.