'காந்தாரா 2' படக்குழுவினர் அடுத்தடுத்து மரணம்.. இதுவரை 3 துரதிஷ்டமான சம்பவங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, தயாரித்து, இயக்க ‘காந்தாரா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து இந்த படத்தின் படக்குழுவினர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் உடுப்பியில் நடந்த திருமண விழா ஒன்றில், இந்த படத்தில் நடித்த நடிகர் ராஜேஷ் பூஜாரி என்பவர் கலந்து கொண்டிருந்த போது, அவர் நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து, உயிரிழந்தார்.
அதேபோல், கொல்லுரி என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற சென்று கொண்டிருந்தபோது, நடிகர்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு இல்லை எனினும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் துணை நடிகராக நடித்து வரும் கபில் என்ற 32 வயது நடிகர் உயிரிழந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஆற்றில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படம் மலைவாழ் மக்களின் தெய்வத்தின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com