தொடரும் ஊரடங்கு...! ரயில்கள் சேவை ரத்து...!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்துள்ளது

கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களை கொடூரமாய் தாக்கி வரும் நிலையில், புயல் ஒருபுறம் வாட்டி எடுத்து வருகிறது. கோவிட் தாக்கத்தின் காரணத்தால், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியூர்களுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு செல்ல, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் மற்றும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான டவ் தே புயல், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே நிர்வாகம், மே 23 முதல் மே 29ஆம் தேதி வரை இயங்கவிருந்த, நாகர்கோயில் - ஹவுரா, திருச்சி - ஹவுரா, சென்ட்ரல் - புவனேஸ்வர் உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் கரையை கடக்கும் எனவும் செய்திகள் கூறுகிறது.

More News

கொரோனா ஆன்டிபாடியை அளக்க புது கருவி? பயன்படுத்துவது எப்படி?

கொரோனா வைரஸ் உடலில் புகுந்தவுடன் சுவாச உறுப்பை காலி செய்து விடுகிறது.

பிரபலமாக திருநங்கைகள் குறித்து அவதூறு வீடியோ......! தர்மஅடி வாங்கிய டிக்டாக் திவ்யா...!

தான் யுடியூப்-பில் பிரபலமாகமாக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட, டிக்டாக் திவ்யா தர்ம அடி வாங்கியுள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிலிண்டர் வெடிப்பு… கோவையில் நடந்த கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வகையில் தொடர்ந்து தமிழக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வருகிறது

தடுப்பூசி போட்டுகிட்டா காரக்குழம்பு சாப்பிடக்கூடாதாம்: கனியை கலாய்த்த நெட்டிசன்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது

கடும் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: மருத்துவர் குழு பரிந்துரை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வருவதை அடுத்து இந்த ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா?