கௌதமிக்கு மத்திய அரசின் மதிப்பு மிகுந்த பதவி

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்தும் கடிதம் மூலமூம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பல கோரிக்கைகளை வலியுறுத்தியவர் நடிகை கெளதமி என்பது தெரிந்ததே. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக கெளதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,. கெளதமியுடன் நடிகை வித்யாபாலனும் இந்த பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த பிரபல தயாரிப்பாளர் பஹலாஜி நிஹலானி திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்சார் போர்டே வேண்டாம் என்று கமல்ஹாசன் உள்பட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களால் மாற்றம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' பறக்கப் போகும் தேதி அறிவிப்பு

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா போன்று கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி என்று கூறப்ப்படும் ஜெய்-அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு பின் உள்ள ரகசியம்

பிக்பாஸ் நாயகி ஓவியா, மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் முழு ஓய்வு எடுத்து வருகிறார்...

புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

உலக அளவில் பிரபலமான தற்காப்பு கலைஞர் மற்றும் நடிகரான புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நதிகளை மீட்க நடிகை ராதிகாவின் வேண்டுகோள்

குளம், குட்டை, கண்மாய், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் ஒரே நீர் ஆதாரம் நதி ஒன்றே. ஆனால் அந்த நதியிலும் மணல்களை கொள்ளையடித்தும், ஆக்கிரமிப்புகள் செய்தும் அழிக்கப்பட்டு வருகிறது...

பிக்பாஸ் வழக்கு: ஐகோர்ட்டில் கமல் தரப்பு பதில்

கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் திடீரென ஒரே வாரத்தில் ஓவியா மற்றும் ஜூலி வெளியேறியதால் தற்போது களையிழந்து வருகிறது...