மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள். என்ன நடக்குது சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில்?

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷ் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் பரப்பப்பட்டு பின்னர் அந்த தகவல் அவர் பதிவு செய்யவில்லை என்றும் அது ஹேக்கர்களின் கைவரிசை என்றும் அவரது கணவரால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சனை ஓய்ந்து ஒருசில நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சில முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.
இந்த பதிவுகளுக்கு மீண்டும் ஒருமுறை சுசித்ரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசமான பதிவு செய்யும் நபர் தான் இல்லை என்றும், அவ்வாறு நினைப்பவர்கள் தாராளமாக தன்னை தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தனக்கும் நடிகர், நடிகைகளுக்கும் பெரிய அளவில் நட்பு இல்லை என்றும், அவர்களுடைய எந்த புகைப்படங்களும் தன்னிடம் இல்லை என்றும் தனது சமூக வலைத்தள கணக்கை முடக்க வேண்டும் என்று நினைக்கும் யாரோ ஒருவர் இந்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலும் என்னால் விளக்கம் அளித்து கொண்டிருக்க முடியாது என்பதால் தற்போதைக்கு எனது சமூக வலைத்தள கணக்கை முடக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக தன்னை தொடரும் பயனாளிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் எதுவும் செய்யப் போவதில்லை என்றும், தனக்கு உண்மையானவர்களுக்கு நிச்சயம் தன் மீது நம்பிக்கை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.,

More News

மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கம்

பிரபல இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் விவாகரத்து வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்து, இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பல ஊடகங்களில் விஜய் மறு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இன்னும் மனதளவில் விஜய்யை விரும்பும் அமலாபால் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும&#

சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை. குஷ்பு

தமிழ் சினிமா, தமிழக அரசியல் என பிசியாக இருந்த குஷ்பு, சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக பேசிய பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் தொல்லை குறித்து பேசிய குஷ்பு, பாவனாவை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி செī

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், மொத்த வசூல் ஆகியவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வசூல். ஒருசிலர் இந்த படம் தோல்வி என்றும், இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று கூறி வந்தாலும் இதுவொரு மாபெரும் வ

பெப்சி-கோக் எதிர்ப்பு எதிரொலி. ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பும் வெளிநாட்டு நிறுவனங்கள்

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கிட்டத்தட்ட இந்தியர்கள் பலர் புரிந்து கொண்டதால் அதன் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் சுத்தமாக பெப்சி, கோக் விற்பனை இல்லை என்றாகிவிட்டது...

அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவேன். பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் உள்பட பிற மொழி படங்கள் டப் செய்து கர்நாடகாவில் வெளியிட கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் படங்கள் வெளியிடும் திரையரங்குகள் முன் அவ்வப்போது ஆர்ப்பாட்டமும் நடந்தது உண்டு....