ஷிவாங்கியுடன் எடுத்த கடைசி போட்டோ: உருக்கத்துடன் பகிர்ந்த அஸ்வின்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை விஜய் டிவியில் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பதும், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக கனி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷகிலா மற்றும் அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது ஒருசில சிறப்பு விருந்தினர்கள் வந்து இருந்தார்கள் என்பதும் அது குறித்த புரமோஷன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும், கோமாளிகளும் தாங்கள் இன்றுடன் பிரிவதை நினைத்து ஒருவருக்கு ஒருவர் கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஸ்வின் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் எடுத்த கடைசி புகைப்படம் இதுதான் என தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 24ம் புலிகேசி வேடத்தில் இருக்கும் ஷிவாங்கி உட்கார்ந்து போன்றும் அவரிடம் அஸ்வின் பேசிக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படத்தை உருக்கத்துடன் பதிவு செய்த அஸ்வின் இந்த புகைப்படத்தை என்னால் என்றும் மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

பார்த்திபன் படத்திற்காக பாடல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய புதிய தகவல்!

இயக்குனர் பார்த்திபன் படத்திற்கு பாடல்கள் கம்போஸ் செய்வது குறித்த புதிய தகவல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்

சிஎஸ்கேவின் எதிர்பாராத தோல்வி: திரையுலக பிரபலங்களின் டுவிட்டுகள்!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கில் பார்த்தபோது மீண்டும் சிஎஸ்கே ஃபார்முக்கு வந்துவிட்டது

கீர்த்தி பாண்டியனை அடுத்து ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட்!

ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் இணையதளத்தை கலக்கியவர் ரம்யா பாண்டியன் என்பதும் இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'கைதி' நடிகர்!

மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'கைதி' படத்தின் ஹீரோவான கார்த்தி தான் நாயகன் என்ற நிலையில்

கொரோனாவில் இருந்து மீண்டது பிரபல தமிழ் நடிகரின் குடும்பம்: உருக்கமான டுவீட்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகர் மற்றும் அவருடைய குடும்பத்தினர்