close
Choose your channels

40 இயக்குனர்கள், தூங்கிட்டேன் சர்ச்சை: விளக்கமளித்த அஸ்வின்!

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தற்போது ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ’40 இயக்குனர்களின் கதை கேட்டேன் என்றும் கதை பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஆகிவிட அதுகுறித்து அஸ்வின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

முன்னணி ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறிய போது, ‘என்னோட அந்த பேச்சு சீரியஸ் ஆனது கிடையாது. முதல் பட ஆடியோ விழா என்பதால் மிகுந்த சந்தோசத்தில் இருந்ததால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் யோசித்து பேசும் ஆள் கிடையாது. முன் தயாரிப்புடனும் பேசமாட்டேன்.

நண்பர்களுடன் விளையாட்டாக பேசுவது போல் விளையாட்டுக்காக 40 இயக்குனருடன் கதை கேட்டேன் என்றும் கதை பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன் என்றும் பேசினேன். 40 என்பது சும்மா விளையாட்டுக்காக சொன்ன கணக்குதான், உண்மை அல்ல.

என் படம் மட்டும் மாஸ், மத்த படம் எல்லாம் தூசு என்று திமிராக பேசக்கூடிய ஆள் நான் கிடையாது. என்னுடைய படம் நல்ல கதை, உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்ல வந்ததை நான் விளையாட்டாக சொன்ன சில வார்த்தைகளை வைத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறினார்.

மேலும் சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கும் மீம்ஸ் குறித்து பேசும்போது ’நான் கூறிய வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதை அறிந்து எனக்கு வருத்தம் என்றும் ஆனால் என்னுடைய நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள் என்றும் அஸ்வின் கூறினார். அஸ்வினின் இந்த விளக்கத்தை அடுத்து டிரோல் மீம்ஸ்கள் நிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.