close
Choose your channels

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மார்க் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்!

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ’குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பதும் மற்றவர்களை கலாய்த்தே அவர் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாலா பத்தாம் வகுப்பு படிக்கும் போது வாங்கிய மார்க் குறித்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. பத்தாம் வகுப்பில் 500-க்கு 490 மார்க் வாங்கி பள்ளியிலேயே இரண்டாவது மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலா. இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண் பெற்று புத்திசாலி மாணவனாக விளங்கிய பாலா, கண்டிப்பாக அவரது திறமைக்கேற்ற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி படிப்பிலும் பாலா புத்திசாலி என்பது தற்போதுதான் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.