close
Choose your channels

நீ எங்க எல்லாருக்கும் செல்லப்பொண்ணு தான்: ஷிவாங்கிக்கு ஆறுதல் கூறிய பிரபலம்

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலம் ஆகி விட்டனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கி வேற லெவலுக்கு பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 1ல் அவர் கலந்து கொண்டு இருந்தாலும், அதற்கு முன்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் குக் வித் கோமாளி சீசன் 2 தான் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது என்பதும் இந்த பிரபலத்தின் காரணமாக அவர் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியான போது அதில் தன்னுடைய குரலால் தான் அவமானபட்டதாகவும் ஆனால் அதே குரல் தான் தனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1ல் விருது வாங்கிக் கொடுத்ததாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும் தன்னை எல்லோரும் ஷிவாங்கி பிள்ளை ஷிவாங்கி பிள்ளை என்று கொண்டாடி வருகிறார்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கண்ணீருடன் கூறினார். இந்த நிலையில் ஷிவாங்கிக்கு ஆறுதல் கூறும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றவர்களில் ஒருவரான பவித்ரா, ’நீ பலருக்கு ஒரு உதாரணம் என்றும், நீ இன்னும் பல உச்சங்களை பார்க்கவேண்டும் என்றும், நீ எப்போதும் எங்கள் அனைவருக்கும் செல்ல பொண்ணு தான்’ .என்றும் பதிவு செய்துள்ளார். பவித்ராவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.