close
Choose your channels

'குக் வித் கோமாளி', இந்த வார எலிமினேஷன் இவரா? கண் கலங்கிய புகழ், ஜிபி முத்து..! 

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரினே, மைம் கோபி, விசித்ரா, ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஷால், ஸ்ருஷ்டி, ஷெரின், காளையன் மற்றும் கிஷோர் ராஜ்குமார் ஆகிய பத்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிஷோர் ராஜ்குமார் எலிமினேட் செய்யப்பட்டார்

இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் சுற்றில் காளையன், விசித்ரா மற்றும் ஸ்ருஷ்டி ஆகிய மூவரும் இருந்தனர். இவர்களில் ஸ்ருஷ்டி முதலில் தன்னை காப்பாற்றிக் கொண்ட நிலையில் காளையன் மற்றும் விசித்ரா ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேஷன் என்று கூறப்பட்டது. அதன் பிறகு நடுவரில் ஒருவரான வெங்கடேஷ் பட் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது காளையன் என்று கூறி அவருக்கு தனது ஆறுதல்களையும் தனது நன்றியையும் தெரிவித்தார்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு செல்வது தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றும், குறிப்பாக புகழ் மற்றும் ஜிபி முத்துவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் காளையன் கூறினார். அப்போது புகழ், ‘இனிமேல் எங்களை அடிக்க யார் இருக்கிறார்? காளையன் எங்களை அடித்தாலும் அவர் இதெல்லாம் மக்கள் சிரிப்பதற்காக தான் பண்ணுகிறேன், தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று எங்களிடம் வெளியில் சொல்வார். அந்த அளவுக்கு நல்ல மனசு உடையவர் என்று கூறினார்.

அதேபோல் ஜிபி முத்து, காளையன் குறித்து கூறிய போது ’காளையன் எலிமினேஷன் ஆவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார். இந்த வாரம் காளையன் எலிமினேஷன் ஆனாலும் மீண்டும் வைல்ட்கார்ட் சுற்றில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.