அடுத்த சீசனுக்கும் வருவேன்.. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஷிவாங்கி நெகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக வந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி அவரைவிட திறமையாக சமையல் செய்யும் போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிக் கொண்டிருந்த நிலையில் ஷிவாங்கி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சர்ச்சையானது. இதற்கு ஷிவாங்கியும் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய இறுதி நிகழ்ச்சியில் அவர் தனது நெகிழ்ச்சியான உரையை நிகழ்த்தினார். இதுதான் எனக்கு கடைசி சீசன் என்ற எண்ணும் போது எனக்கு கண் கலங்குகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் அடுத்த சீசனில் நான் கெஸ்ட் ஆக வருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கோமாளியாக இருந்தால் ஒவ்வொரு சீசனிலும் வரலாம், ஆனால் குக்காக இருந்தவர்களுக்கு அடுத்த சீசனில் இடமில்லை என்பதை அடுத்து அவர் கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் நடுவர் வெங்கடேஷ் பட் ஷிவாங்கியிடம் ’உன் அம்மா அப்பா இருவரும் பாடகர்களாக இருந்த போதிலும் நீ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்லவில்லை. ஆனால் உனக்கு சமையல் எதுவும் தெரியாமல் உன்னுடைய முயற்சியால் அதை கற்றுக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளது பெரிய விஷயம்’ என்று அவருக்கு வாழ்த்து கூறினார்.
அடுத்த சீசனில் குக்காக மற்றும் கோமாளியாக இல்லாமல் கெஸ்ட் ஆக வருவேன் என்று ஷிவாங்கி கூறியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments