close
Choose your channels

'குக் வித் கோமாளி சீசன் 4': இந்த வார எலிமினேஷன் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்?

Sunday, March 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி என்பதும், இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், நடிகர் காளையன், நடிகை விசித்ரா, நடிகர் மைம்கோபி, இயக்குனர் கிஷோர் மற்றும் ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் குக்குகளாகவும், கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கிஷோர், காளையன் ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் கோமாளி மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் இன்று மற்றொரு போட்டியாளர் எலிமினேட் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு தான் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றாலும் ஹாட்ஸ்டாரில் இன்று காலை ஒளிபரப்பிவிட்டதால் பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து முடிந்து விட்டனர்.

அந்த வகையில் இந்த வார எலிமினேஷன் சுற்றில் ஷெரின் மற்றும் ராஜ் ஐயப்பா கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையில் நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் ராஜ் ஐயப்பா தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் என்று கூறினர்.

இதனை அடுத்த ராஜ் ஐயப்பாவின் நெருங்கிய நண்பரான விஷால், ‘ராஜ் ஐயப்பா எலிமினேஷன் செய்வது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் ஆனாலும் அவர் இந்த நிகழ்ச்சியை நிறைய கற்றுக் கொண்டதாக என்னிடம் கூறியது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது தான் ராஜ் ஐயப்பாவை தான் முதன்முதலில் பார்த்ததாகவும் அதன் பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம் என்றும் அவர் கண்கலங்கி கூறினார்.

இதனை அடுத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் ராஜ் ஐயப்பாவை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தனர். குறிப்பாக ராஜ் ஐயப்பாவுக்கு கோமாளியாக இருந்த சுனிதா கண்கலங்கினார்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.