close
Choose your channels

ஷிவாங்கிற்கு சொம்பு தூக்குகிறார்களா நடுவர்கள்? நெட்டிசன் கேள்விக்கு வெங்கடேஷ் பட் பதில்..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சீசனில் சமையலுக்கான பொருட்களின் பெயர் கூட தெரியாமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக ஆனது மட்டுமின்றி அவர் இந்த சீசனின் பைனலிஸ்ட்களில் ஒருவராகவும் தேர்வு பெற்று உள்ளார். இதனை அடுத்து நெட்டிசன்கள் சிலர் விஜய் டிவி ஷிவாங்கிக்கு சாதகமாக இருப்பதாகவும் நடுவர்கள் ஷிவாங்கிக்கு சொம்பு தூக்குவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு வெங்கடேஷ் பட் பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி’. ஏற்கனவே மூன்று சீசன்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த வாரம் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனலிஸ்ட் போட்டியாளராக மாறுவார் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே ஷிவாங்கி தான் பைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியும் சரி, நடுவர்களும் சரி ஷிவாங்கிக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் நடுவர் வெங்கடேஷ் பட் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஷிவாங்கியும் நானும் அப்பா மகள் போல பழகினாலும் அது போட்டிக்கு வெளியே தான். போட்டியின் போது அவர் சமைப்பதை வைத்து தான் நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.