கத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்....! ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..!

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான், தற்போது தத்தே புயலாக உருவாகியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள, கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து மாவட்டமே குளிர்ச்சியாக உள்ளது.

ஆனால் இங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியதை தொடர்ந்து, 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.

தெற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தத்தே புயலாக மாறியுள்ளதால், கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களுக்கு, கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரக்கோணத்திலிருந்து கோவை வந்தடைந்த 54 நபர்கள் கொண்ட, 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ராமநாதபுரம் மாநகராட்சி திருமணமண்டபத்தில் தங்கியுள்ளனர். மழை நேரம் என்பதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News

பட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஷூட்டிங் எப்போ டைரக்டர்? தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி!

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? என தனுஷ் படத்தின் இயக்குனரிடம் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்! 

கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து காலமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்பட

இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி

பிரபல இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், இருவருமே கொரோனாவுக்கு பலியாகினர் என்று சொல்வதை விட சரியான நேரத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காததால்