ஓடிடியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் ரஜினி - கமல் படங்கள்.. 'கூலி', 'தக்லைப்' தயாரிப்பாளர்களின் திட்டம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கூலி’ மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தக்லைப்’ ஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் ஓடிடி ரிலீஸ் விஷயத்தில் ஒரு புதிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுவதால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது ஓடிடி தளங்களின் பிசினஸ் என்பது மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் நிலையில், வட இந்தியாவில் உள்ள மல்டி காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி எட்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக இருந்தால் மட்டுமே தங்கள் திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனை காரணமாக பல முக்கிய தமிழ் திரைப்படங்கள் வட இந்தியாவில் உள்ள மல்டி காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கூலி’ மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தக்லைப்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வட இந்தியாவில் உள்ள மல்டி காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் திரையிடப்படும் என்றும், அதனால் கூடுதல் வசூல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஜினி, கமல் பாணியை மற்ற நடிகர்களின் திரைப்படங்களும் பின்பற்றுமானால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments