close
Choose your channels

யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும்?

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகச் சட்டப்பேரவையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பயனாளர்களின் 51 விவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் இதனால் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு?

2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

தவறாக AAY (அந்தியோதயா அன்ன யோஜன) குடும்ப அட்டையைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி நகைக்கடன் பெற்றவர்கள். மற்றும் இதுபோன்ற மேலும் சில தேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது” என்று முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு நகைக்கடன்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக சில மாவட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின் மீது தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடியானது உரிய ஏழைகளுக்கு கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இதில் பயிர்க்கடன் தள்ளுபடியில் நடைபெற்றது போன்று தவறு நடக்காத வண்ணம் பயனாளர்களின் 50 க்கும் மேற்பட்ட தரவுகள் திரட்டப்பட்டு அதனைப் பகுப்பாய்வு செய்து பின்னரே கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் நகைக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளன.

அந்த வகையில் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்த முதல்வர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முழுமையான விவரங்களை கூட்டுறவு சங்கம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.