கொரோனா 2-ஆம் அலை...! தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை போலவே, தமிழகத்திலும் வேகமாக பரவி வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய தொல்லியத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு இடங்களை ,வரும் மே மாதம்-15 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகப்புகழடைந்த தஞ்சை பெருவுடையார் கோவில் இன்று மூடப்பட்டுள்ளது. இக்கோயிலின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்ட காரணத்தால், தரிசனத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டை இருக்கும், நாமகிரி தாயார் – நரசிம்மர் கோயில் மற்றும் அரங்கநாதர் கோயில் கோவில்கள் மூடப்பட்டு, மத்திய தொல்லியத்துறை சார்பாக கோயிலின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக, வரும் மே-15 ஆம் தேதிவரை கோவில்கள் மூடப்படும் என்றும்,பக்தர்கள் வழிபடத்தடை என்றும் கூறப்பட்டிருந்தது. கோவில் விதிகளின்படி, பூஜைகள் மட்டும் நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.


 

More News

நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவி: இதயம், நுரையீரல் செயல்பாட்டிற்கு சிகிச்சை என தகவல்!

பிரபல காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளான, சிபிஐ இயக்குனர் காலமானார்....!

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காலமானார். 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய '99 சாங்ஸ்' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

தமிழகத்தில் சனி, ஞாயிறு லாக்டவுனா? பெரும் பரபரப்பு!

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தன்னை போலவே உடை: குக் வித் கோமாளி' பவித்ராவை பாராட்டிய சமந்தா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா என்பதும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும்