கூடங்குளம், சிஏஏ, கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் போடப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மத்திய அரசு அறிவுரையின் பேரில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்தும், ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டும் வந்தனர். அப்போது வன்முறையில் ஈடுபட்ட சில குறிப்பிட்ட குற்றங்கள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற ஒரு சில வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.

அதேபோல குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்துச் செய்யப்படுகிறது என்றும் இப்போராட்டங்களின்போது தடையை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தற்காகவும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றார்.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் பொது மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

More News

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழக முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே கொடுத்துவிட்டேன்: விஜய்சேதுபதியின் தன்னடக்கம்!

சினிமாவை பொறுத்தவரை திரையில் தோன்றும் கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களை தான் பொது மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் அந்த சினிமாவை உருவாக்க பின்னணியில் நூற்றுக்கணக்கானோர்

விவசாயிகளின் நலனுக்காக 10 இடங்களில் பிரம்மாண்ட சந்தை- முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும்

ஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். மிகச் சிறந்த பேட்டிங் வீரரான இவர் தற்போது டி20 போட்டி மற்றும் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கடல் நடுவே அந்தரத்தில் பிகினியில் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

சூர்யா நடித்த 'என்ஜிகே' கார்த்தி நடித்த 'தேவ்' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங்.