close
Choose your channels

மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

Wednesday, April 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1596 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 பேர்கள் 26 பேர் செய்தியாளர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் ஒரே செய்தி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல் ஆகும். கொரோனா குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் சென்னையில் இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது செய்தியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்கள் மிகவும் கவனத்துடன் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும், சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் செய்தியாளர் சந்திப்பை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.