close
Choose your channels

உங்களுக்கு கொரோனா பாசிடிவ்… தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி!!!

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனக்கு கொரோனா இருக்கும் தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் உயிரையே விட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி எனும் பகுதியில் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்துவரும் 65 வயதான மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கலிகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். இந்தப் பரிசோதனைக்கு சென்றுவிட்டு 2 நாட்கள் கழித்தப்பின்பு அவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அந்த மூதாட்டிக்கு உடனே அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அந்த அதிர்ச்சியில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.