close
Choose your channels

டெல்லியில் இருந்து திண்டுக்கல் திரும்பிய 31 பேருக்கு கொரோனா பரிசோதனை

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவை திரும்பி 82 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்களின் ரத்த பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து இருந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திண்டுக்கல் திரும்பிய 31 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதாகவும் அவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் டெல்லி உள்பட வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என்றும் கொரோனா அறிகுறி இருந்தால் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.