close
Choose your channels

வேறு எந்த நோயும் இல்லை: கொரோனாவால் மட்டும் உயிரிழந்த சென்னை இளம்பெண்

Wednesday, July 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேறெந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது குறித்தும் சென்னையில் இன்று மட்டும் 1,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறித்தும் செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 64 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் நிகழ்ந்த உயிரிழப்புகள் 26 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் உயிரிழந்த 21 வயது இளம்பெண்ணுக்கு வேறெந்த இணை நோயும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக சளி காய்ச்சல் மற்றும் ஒரு நாள் மூச்சுப் பிரச்னை மட்டுமே இருந்ததாகவும், இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் ஜூலை 6ஆம் தேதி காலை 6.53 மணிக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் உள்பட பல இணை நோய்கள் இருந்துள்ளது. ஆனால் வேறெந்த நோயும் இல்லாமல் வெறும் சளி, காய்ச்சல் மட்டுமே இருந்த இளம்பெண், கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos