அமேசான் காட்டையும் விட்டு வைக்காத கொரோனா: பழங்குடியின பெண்ணையும் தாக்கியதால் பரபரப்பு 

உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி, இதுவரை உலகம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்ததே. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் மட்டும் சுமார் 7,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அங்கு கொரோனா வைரசால் 255 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரேசில் நாட்டின் தலைநகரில் இருந்து 850 கிலோ மீட்டர் தூரம் உள்ள அமேசான் காட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி விட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவர் ஒருவரிடம் நர்சாக பணிபுரிந்து வருவதாகவும், அந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததால் அந்த வைரஸ் அந்த பெண்ணுக்கு பரவியதாகவும், இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினரை பார்க்க அமேசான் காட்டிற்குச் சென்றபோது அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் அமேசான் காட்டில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை என்பதால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நகரத்திற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்து, அழிந்து வரும் இனமாக இருக்கும் நிலையில் தற்போது கொரோனா அவர்களை தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது

More News

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன

சென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை

தமிழ் சினிமாவின் காமெடி நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருமான நடிகை ஆர்த்தி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு 

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்

கொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்

எந்த ஒரு இயற்கை பேரிடர் நாட்டிற்கு வந்தாலும் முதல் ஆளாக நிதி அளித்து நாட்டிற்கு தோள் கொடுப்பது திரையுலக பிரபலங்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து தற்போதைய காலம்