சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே பெரும் அச்சமும் சோகமும் அடைந்துள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இதுவரை ‘கரோனா’வைரஸ் நோய் ஒருவரைக் கூட தாக்கவில்லை. ஆனாலும், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து வருவோர் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி அவசர சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு தனி வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுரை அரசு மருத்துவமனையிலும் இந்த சிறப்பு வார்டு இன்று திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் தனி மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளே இந்த வைரஸ் நோயால் பெரும் அச்சமும், சோகமும் அடைந்துள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டை, கோலம்போட்டு, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டீன் சங்குமணி, இந்த வார்டை வழக்கமான உடையில் வராமல் கோட் சூட் போட்டு டிப்டாப்பாக வந்து திறந்து வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நோயே யாருக்கும் வரக்கூடாது என்ற மனநிலையில் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் இருந்தாலும் வந்தால் அவர்களைப் பாதுகாக்க, கண்காணிக்கவே இந்த சிறப்பு வார்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்த வார்டையே ஒரு கட்டிடத் திறப்பு விழா போல் கொண்டாடும் மனநிலையில் வார்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

More News

கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொரோனா வைரஸ் மாதிரியை உருவாக்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் வெகு அரிதாகவே மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி வருகிறார்.

ஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்

பேஸ்புக்கில் நட்பான இளைஞர் ஒருவரிடம் தனது மனைவி மணிக்கணக்காக மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

18 ஆண்டுகள் கழித்து வெளியாகும் மணிரத்னம் இயக்காத திரைப்படம்!

மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' என்ற திரைப்படத்தின்  ரிலீஸ் தேதி பிப்ரவரி 7 என ஏற்கனவே

சென்னையில் 68 பேருக்கு கரோணா வைரஸ் பாதிப்பு அறிகுறி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! தமிழக சுகாதார செயலாளர்.

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.