close
Choose your channels

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம்!!! பிறந்த குழந்தைக்கும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை!!!

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம்!!! பிறந்த குழந்தைக்கும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை!!!

 

இலங்கையில் களுத்துரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தற்போது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

களுத்துரை அடுத்த பன்னிலத்தில் இருக்கும் வணிகவாளத்திற்கு சென்றபோது கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தனிமைப்படுத்தப் பட்ட அவர் பன்னிலத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முன்னதாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் கொரோனா பாதிப்பு இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்தார். அதேபோல இந்தக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தற்போது மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 178 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும், 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.