பரிசோதனையில் ஜெர்மனி கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

 

ஜெர்மனியின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருக்கிறது. அமெரிக்கா உட்பட உலகில் நான்கு பெரிய தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக, அமெரிக்காவின் மாடர்னா தெரபெடிக்ஸ் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி மனிதர்களின் மீது பரிசோதனையை ஆரம்பித்து விட்டது. தற்போது ஜெர்மனியின் தடுப்பூசி பரிசோதனைக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே ஜெர்மன் நிறுவனத்தின் தடுப்பூசி தயாராகியிருப்பது குறித்து அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜெர்மன் Biotechnology நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் மிகவிரைவாக மனிதர்களின் மீது பரிசோதனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசி சோதனைக்காக 18 வயது முதல் 55 வயதுடைய 200 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

More News

மனிதம் வாழ்கிறது; ஒரேநாளில் 70 ஆயிரம் தொழிலாளர்களின் பசியைப்போக்கும் தன்னார்வ அமைப்பு!!!

மும்பை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் பசியை போக்கும்

தளபதி விஜய் மகன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி?

தளபதி விஜய் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கும் முதல் படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ராணுவ வீரரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எளிமையின் சின்னமாக இருப்பதாகவும் அவரிடம் சமூக வலைதளம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேற்றபடுவதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்

உலகின் தலைசிறந்த சொல்லை செய்து காட்டுவோம்: சிவகார்த்திகேயன்

கொரோனா வைரஸ் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் கொரோனாவின் சீரியஸ் குறித்து இன்னும் பலர் அறியாமல் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

மே 3க்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் கட்ட ஊரடங்கு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை இருக்கும்